×

கஞ்சா விற்பனை குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம்


பெரம்பலூர்,நவ.11:பெரம்ப லூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும். இது குறித்து தொடர்பு எண்களுடன் தொடர்பு கொள்ள அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், பாடாலூர், மங்களமேடு, அரு ம்பாவூர், வி.களத்தூர், கை.களத்தூர், மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தங்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பு வைத்துள்ள டிஜிட்டல் அறிவிப்பு பதாகையில் தெரிவித்திருப்பதாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்தல் மற்றும் வைத்திருத்தல் போன்ற செயல்பாடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரேனும் கஞ்சா மற்றும் அது சம்பந்தமான போதைப்பொருட்கள் விற்றாலும் வைத்திரு ந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தருமாறு காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது இது தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

இதன்படி பெரம்பலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்டபகுதிகளில் யாரேனும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்தாலோ வைத்திருந்தாலோ பெரம்பலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டருக்கு 9498162 851 சப்.இன்ஸ்பெக்டருக்கு 94893 63631, காவல் நிலையத்திற்கு 9498100692 ஆகிய எண்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அரும்பாவூர் காவல் நிலைய இன்ஸ் பெக்டருக்கு 9498159328, சப் இன்ஸ்பெக்டருக்கு 94981 59076, காவல்நிலையத்தி ற்கு 9498100694 ஆகியஎண்களுக்குத் தகவல்தெரிவிக் கவேண்டும்.

குன்னம் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு 94878 75266, சப்.இன்ஸ்பெக்டருக்கு 94 981 58931, காவல் நிலையத்திற்கு 94 981 00 697 ஆகிய எண்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண் டும். பாடாலூர் காவல் நி லைய இன்ஸ்பெக்டருக்கு 94981 58386, சப் இன்ஸ்பெ க்டருக்கு 9498159272, காவ ல் நிலையத்திற்கு 94 981 00 693ஆகிய எண்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண் டும்.மங்களமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டருக் கு 9498165579, காவல்நி லையத்திற்கு 94981 00696 ஆகிய எண்களுக்குத் தக வல் தெரிவிக்க வேண்டும். வி.களத்தூர் காவல் நிலை ய இன்ஸ்பெக்டருக்கு 94981 65579,சப் இன்ஸ்பெக்டருக் கு 94 981 09747, காவல்நி லையத்திற்கு 9498100699 ஆகிய எண்களுக்குத் தக வல் தெரிவிக்க வேண்டும்.இதுபோல் கைகளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு 9498100698, மருவத்தூர் போலீஸ் நிலையத்திற்கு 9498100695 என்ற எண்களுக்கும் தகவல்களைத் தெரிவிக்கலாம். சரியான தகவல் தரும் நபர்களுக்கு தக்க சன்மானம் தரப்படும் என அனைத்து போலீஸ் நிலையங்கள் முன்பும் வைத்துள்ள டிஜிட்டல் அறிவிப்புப் பதாகையில் வெளியிட்டுள்ளனர்.

Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...