×

20 சதவீத போனஸ் வழங்க கோரி மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சீர்காழி, நவ.11: சீர்காழி மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் தீபாவளி பண்டிகைக்கு மின்சார வாரிய ஊழியர்களுக்கு 20% போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயல் தலைவர் செல்வராஜ் தலைமை வைத்தார். மயிலாடுதுறை இணை செயலாளர் தனசேகரன் முன்னிலை வகித்தார். சீர்காழி கோட்ட செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மின்சார வாரிய ஊழியர்களுக்கு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மின்சார வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Electricity Board ,
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி