×

இரவு 11.30 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் காரைக்கால் வணிகர்கள் கோரிக்கை

காரைக்கால், நவ.11: தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் 15ம் தேதி வரை இரவு 11.30 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்-. என, புதுச்சேரி முதல்வருக்கு காரைக்கால் வணிகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, காரைக்கால் வணிகர்கள் சங்க தலைவர் முத்தையா, செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர், புதுச்சேரி முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: கடந்த மார்ச் மாதம் முதல், கொரோனா தொற்று காரணமாக, காரைக்காலில் உள்ள அனைத்து வியாபாரிகளும் கடைகளை திறக்காமல், கடை வாடகை, மின் கட்டணம், நகராட்சி வரி உள்ளிட்டவை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். அரசின் சில தளர்வுகளால், தற்போதுதான், கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகிறோம். தீபாவளி பண்டிகைக் காலமாக இருப்பதால், கொரோனா தொற்று காரணமாக, பொதுமக்கள் குறைவான அளவிலேயே கடைவீதிக்கு வந்து செல்கின்றனர். இந்த நேரத்தில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, புதுச்சேரி முதல்வர் மேலும் சில தளர்வுகளாக, வரும் 15ம் தேதி வரை அனைத்து வியாபாரிகளும் இரவு 11.30 மணி வரை கடைகளை திறந்து வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : traders ,Karaikal ,shops ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...