×

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ஊட்டி, நவ. 11: ஊட்டி நகராட்சியில் பணியாற்ற தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் ஊட்டியில் நடந்தது. ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் 300க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மை பணியாளர்களும், 350க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் கால கட்டம் என்பதால், தூய்மை பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் போடுவது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஊட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் ஊட்டி அப்பர் பஜார் சாலையில் உள்ள நகராட்சி பள்ளியில் நடந்தது. இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு முதலில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் ஜிங்க், வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

Tags : camp ,
× RELATED பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள்...