×

விதிமீறி கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத்திற்கு சீல்

கோவை, நவ. 11: கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 51வது வார்டு, காந்திபுரம் 100 அடி ரோடு அருகேயுள்ள ராஜேந்திர பிரசாத் சாலையில் அமைந்துள்ள 3 தளங்கள் கொண்ட தனியார் வணிக வளாகம், விதிமீறி கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் மத்திய மண்டல உதவி கமிஷனர்  மகேஷ் கனகராஜ் தலைமையில்,  நகரமைப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், சசிப்பிரியா உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அந்த தனியார் வணிக வளாகத்திற்கு சீல் வைத்தனர். மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் அனுமதி பெற்ற வகையில் மாற்றி அமைக்குமாறு கட்டிட உரிமையாளருக்கு  நோட்டீஸ் வழங்கி 20 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டது. இந்த கால கெடுவுக்குள் கட்டிடத்தை மாற்றியமைக்காதால் தனியார் கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டது’’ என்றார்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு