×

அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை இலவசமாக வழங்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

ஈரோடு, நவ. 11:  ஈரோடு பெரியார் நகர், புதுமைகாலனி, அழகரசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1072 அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் புதியதாக கட்டப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு பயனாளியும் தங்களது பங்களிப்பாக ரூ.1.25 லட்சம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா பாதிப்பு சூழலில் பொருளாதார ரீதியாக மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளதால், பயனாளிகளுக்கு பங்களிப்பு தொகை ஏதும் இன்றி இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நேற்று அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் ஈரோடு தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணி, பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags : apartment houses ,
× RELATED சென்னையில் சிதலம் அடைந்த...