ஈரோடு, நவ. 11: ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பவானி கே.ஏ.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பாரி, துரை ஆகியோர் இன்று (11ம் தேதி) மாலை 5 மணிக்கு பவானியில் மறைந்த மாநில மாணவரணி துணை செயலாளர் ரங்கசாமி படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். எனவே ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள் வெண் சீருடையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.