×

பல்பொருள் அங்காடி மூலம் பொருட்கள் டோர் டெலிவரி

திருவள்ளூர், நவ.10: திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசாருக்கு காவலர் பல்பொருள் அங்காடி மூலம் பொருட்களை டோர் டெலிவரி செய்து தர வேண்டுமென போலீசார் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் மாவட்ட தலைநகரில் காவல்துறையினருக்கு குறைந்த விலையில் அனைத்து பொருட்களும் கிடைக்க காவலர் சிறப்பு அங்காடி செயல்படுகிறது. இங்கு குறைவான விலையில் பொருட்கள் விற்கபடுகிறது. திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் பல்பொருள் அங்காடி செயல்படுகிறது.

இதன்மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் குடும்பத்தினர் பயனடைகின்றனர். தற்போது, கொரோனா நடவடிக்கை காரணமாக, போலீசார் அங்கு சென்று பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு காவலர் பல்பொருள் அங்காடியிலிருந்து பொருட்களை டோர் டெலிவரி செய்கின்றனர்.அதுபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும், காவல்துறையினருக்கு, காவலர் பல்பொருள் அங்காடியிலிருந்து பொருட்கள் டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

Tags : supermarket ,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரம்:...