×

பணி மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பம்


சிவகங்கை, நவ.10:  ஊரகவளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில்: சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், காலிப்பணியிட விபரம், இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை இம்மாவட்டத்தின் www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரியசான்றுகளின் நகல்களுடன் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம்(வளர்ச்சிப் பிரிவு)-நேரிலோ அல்லது கலெக்டர்(வளர்ச்சி பிரிவு), 2வது தளம், கலெக்டர் அலுவலகம், சிவகங்கை என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 8.12.2020க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : job supervisor ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு