×

பொறுப்பில் இல்லாதவருக்கு முக்கியத்துவம் அரசு விழாவில் அதிமுகவினர் அடாவடி

காரைக்குடி, நவ. 10:காரைக்குடி அருகே சின்னகுன்றக்குடியில், நேற்று பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழா நடந்தது. இதில் கலெக்டர் ஜெயகாந்தன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருப்புத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ பெரியகருப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழாவுக்கு அதிமுக செய்தி தொடர்பாளராக உள்ள திருப்பத்தூரை சேர்ந்த மருது அழகுராஜை அதிமுகவினர் அழைத்து இருந்தனர். அரசு பொறுப்பில் இல்லாதவரை அரசு விழாவிற்கு அழைத்து முக்கியத்துவம் தரக்கூடாது என எம்எல்ஏ பெரியகருப்பன் மற்றும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கிருந்து மருது அழகுராஜ் புறப்பட்டு சென்றார். பின்னர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்க விழா நடந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கு வந்த ஆவின் சேர்மன் அசோகன் உள்பட அதிமுகவினர் சத்தம் போட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் டிஎஸ்பி அருண் சம்பவ இடத்துக்கு வந்து, எம்எல்ஏ பெரியகருப்பனிடம் சமாதானம் பேசி அழைத்து சென்றார். 

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ