மதுரை, நவ.10: மதுரை காவல்நிலையத்தில் பெண் எஸ்ஐக்கு சக போலீசார் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். மதுரை மதிச்சியம் காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் அமுதவள்ளி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவருடன் பணிபுரியும் சக காவலர்கள், இவருக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் நேற்று அண்ணாநகர் உதவி கமிஷனர் லில்லிகிரேஸ் தலைமையில், இன்ஸ்பெக்டர் செல்வி முன்னிலையில் மதிச்சியம் காவல்நிலையத்தில் சக காவலர்கள் மூலம் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சி காவலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காவல்நிலையம் என்றால் அச்சப்படும் நிலை மாறி தற்போது காவல்நிலையங்கள் அனைவராலும் மதிக்கப்படும் நிலையமாக மாறி வருகிறது.