×

திருநகரில் தேவருக்கு நினைவிடம் தேவரின கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம், நவ.10: திருநகரில் முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றக் கோரி தேவரின கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பசும்பொன் தெருவில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகம் உள்ள இடத்தில் முத்துராமலிங்கத்தேவர் கடைசி காலத்தில் வாழ்ந்து மறைந்தார். எனவே அவரின் நினைவாக இந்த இடத்தை நினைவிடமாக மாற்றக் கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், முத்துராமலிங்க தேவர் அறக்கட்டளை, பார்வர்டு பிளாக்(வல்லரசு), பார்வர்டு பிளாக்(சந்தானம்), தென்னிந்திய பார்வர்டு பிளாக், மருதுபாண்டியர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் தேவரின கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை திருநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்எல்ஏ கதிரவன், இளங்கோ, அம்மாசி, கண்ணன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : God ,Memorial Demonstration ,Thirunagar ,
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?