×

வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு சப்கலெக்டர் ஆய்வு

பட்டிவீரன்பட்டி, நவ. 10: பெரும்பாறை அருகேயுள்ள கூட்டப்பாறை  மலைக்கிராமத்தில் ஆதிவாசி இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள்  தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட்டப்பாறையில் இருந்து 2  கிமீ தொலைவில் உள்ள நல்லூர்காடு என்ற கிராமத்திற்கு வர வேண்டும்.  இவ்வூருக்கு செல்லும் வண்டிப்பாதையை தனியார் சிலர் அடைத்ததாகவும், அதனை  மீ்டு தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் எனக்கூறி இப்பகுதி மக்கள் திண்டுக்கல்  கலெக்டர், கொடைக்கானல் சப்லெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.  அதன்பேரில் சப்கலெக்டர் சிவகுரு பிரபாகரன் கூட்டப்பாறைக்கு வந்து நேரடியாக  ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Subway collector inspection ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...