×

நாளை தீர்த்தவாரி பட்டாசு விற்பனை துவக்கம்

திருச்சி புத்தூர் சிந்தாமணி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் பட்டாசு பிரிவினை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பண்டகசாலை தலைவர் சகாதேவ்பாண்டியன், துணைத்தலைவர் பாஸ்கரன், துணை பதிவாளர்கள் சித்ரா, பத்மகுமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ஹபிபுல்லா, சிறப்பங்காடி பொது மேலாளர் கருப்புசாமி, நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்றனர்.

ஆலயம் புதுப்பிக்க நிதியுதவி
அரியமங்கலம் பகுதி காட்டூர் புனித அந்தோணியார் ஆலயம் புதுப்பிக்கும் பணிக்காக குருவானவர், நிர்வாக குழுவின் வேண்டுகோளுக்கேற்ப அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், ரூ.1 லட்சத்தை பங்குதந்தை சேகர் செபாஸ்டினிடம்  வழங்கினார். நிகழ்ச்சியில்  பகுதி செயலாளர் தண்டபாணி, வட்ட செயலாளர் விஸ்வநாதன், ஆலய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஞானாதிக்கம், ஷாஜி ஜோசப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வட்ட பிரதிநிதி அல்போன்ஸ் செய்திருந்தார்.

Tags : Tirthwari ,
× RELATED தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக...