தஞ்சை, நவ. 10: தஞ்சை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது. தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் வரும் 12ம் தேதி காலை 11 மணிக்கு கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு தஞ்சை வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி தெரிவித்துள்ளார்.