×

புதுகையில் புதிதாக 20 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை, நவ. 10: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 10,819ஆக உயர்ந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 10,475 ஆக உயர்ந்துள்ளது. புதிய இறப்பு இல்லாததால் மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 153 ஆக தொடர்கிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 195 ஆக குறைந்துள்ளது.

Tags : Corona ,newcomers ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...