×

எம்.பி. ராசா முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க. வில் இணைந்தனர்

ஊட்டி, நவ. 10: மஞ்சூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. வினர் அக்கட்சியில் இருந்து விலகி எம்.பி. ராசா முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலரும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். எல்ேலாரும் நம்முடன் என்ற இணைய வழி திட்டத்தின் கீழ் தற்போது மாவட்டம் முழுவதும் புதிதாக இணைந்து வரும் நிலையில், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று ஊட்டி எம்.பி. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஊட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சூர் பகுதியை சேர்ந்த சிலர் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க. துணை பொது செயலாளரும் எம்.பி.யுமான ராசா முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமசந்திரன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபு, மஞ்சூர் பகுதியை சேர்ந்த சலீம், சதீஷ்குமார், ஜான் ஆகியோர் உள்ளனர்.

Tags : Rasa ,parties ,DMK ,
× RELATED நீலகிரி மாவட்ட திமுக., தோழமை...