×

முல்லைக்குடியில் முன்விரோதம் இருவரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு ஒருவர் கைது

திருக்காட்டுப்பள்ளி,நவ.9: திருக்காட்டுப்பள்ளி அருகே முல்லைக்குடியில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் இருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே முல்லைக்குடி கீழ குடியானத்தெரு சாலமன் மகன் ஞானசேகரன்(43). இவருக்கும் அதே ஊர் சவுரிநாயகம் மகன் பிரபுஅமல்ராஜ்க்கும் முல்லைக்குடி மாதாகோயில் நிர்வாகம் குறித்து முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி இது குறித்து ஏற்பட்ட தகராறில் பிரபுஅமல்ராஜ், ஸ்டாலின்ஜெயகுமார், தினேஷ், உதயபிரகாஷ், சந்தோஷ் ஆகியோர் ஞானசேகரனை தரக்குறைவாக திட்டி தாக்கினர்.

தடுக்க வந்த ஞானசேகரன் தம்பி செல்வமணியையும் தாக்கினர். இதில் காயமடைந்த ஞானசேகரன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து அவர் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் எஸ்ஐ பாஸ்கரன் வழக்கு பதிந்து சந்தோஷை(31) கைது செய்தார். மற்றவர்களை தேடி வருகிறார்.

Tags : attack ,persons ,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...