×

பாபநாசம் பகுதியில் அட்மா திட்டம் சார்பில் பூ, காய்கறி சாகுபடி குறித்த கல்வி சுற்றுலா

பாபநாசம், நவ.9: பாபநாசம் அருகே அம்மாப் பேட்டை வட்டார அட்மாத் திட்டம் சார்பில் 50 விவசாயிகளுக்கு பூ மற்றும் காய்கறி சாகுபடி குறித்த நேரடி கல்விச் சுற்றுலா பயிற்சி பாபநாசம் அடுத்த சுவாமிமலை இதன்சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைப் பெற்றது. இதில் அருந்தவபுரம், சூழியக்கோட்டை , இடையிருப்பு, ஒன்பத்து வேலி உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 50 விவசாயிகள் பங்கேற்றனர்.

தற்போதைய கால சூழ் நிலைக்கேற்ப குறிப்பிட்ட வகை காய்கறி, மலர்களை சாகுபடிச் செய்து உரிய சந்தைப் படுத்துதல் மூலம் அதிக லாபம் பெறுவது குறித்து முன்னோடி காய்கறி, மலர் சாகுபடி விவசாயிகள் சேகர், அன்புராஜ் விளக்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை அம்மாப் பேட்டை வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா, அட்மாத் திட்ட மேலாளர் பிரகாஷ், உதவி மேலாளர் புனிதா செய்திருந்தனர்.

Tags : tour ,area ,Papanasam ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...