×

ஒரே குண்டும், குழி; எப்படி பாஸ் போறது... பூட்டிய வீட்டுக்குள் இருந்து கொண்டு வாலிபர் தற்கொலை மிரட்டல் கோம்பையில் பரபரப்பு


உத்தமபாளையம், நவ. 9: உத்தமபாளையம் அருகே, கோம்பையில் பூட்டிய வீட்டில் காஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் முருகன் மகன் அஸ்வின் (21). டிப்ளமோ முடித்த இவர், நேற்று மாலை தனது வீட்டிற்குள் சென்று உட்புறமாக பூட்டிக்கொண்டார். பின்னர் காஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். இது குறித்து கோம்பை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் வீட்டுக்கு வந்து வாலிபரை வெளியே வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியும் நேற்று இரவு வரை, அஸ்வின் வரவில்லை. இதனால், வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பூட்டிய வீட்டில் இருந்து கொண்டு தற்கொலை மிரட்டல் விடுக்கும் வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : pit ,house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...