×

ஆவுடையார்கோவில் அருகே வாட்டர் டேங்கில் பைக் மோதி வாலிபர் பலி

அறந்தாங்கி, நவ.9: ஆவுடையார்கோவில் அருகே சாலை ஓரம் இருந்த வாட்டர் டேங்கில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். ஆவுடையார் கோவிலை அடுத்துள்ள காவதுகுடியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சதீஷ்குமார் விடுமுறையில் கடந்த சில மாதங்களுக்கு ஊர் திரும்பினார். அவர் நேற்று இரவு மீமிசலில் இருந்து ஆவுடையார் கோவில் நோக்கி தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். விளானூர் அருகே வந்த போது சாலை ஓரம் இருந்த வாட்டர் டேங் மீது பைக் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Walipur ,Audyarkov ,
× RELATED ஏடிஎம் மையம் உடைப்பு: ஒடிசா வாலிபர் சுற்றி வளைப்பு