×

விழிப்புணர்வு முகாம்

வருசநாடு, நவ. 9: மயிலாடும்பாறையில் ‘விபத்தை தடுப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்’ என்னும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், மயிலாடும்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமை வகித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கி பேசினார். மயிலாடும்பாறை தீயணைப்பு நிலைய வீரர்கள் கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் கிராம பொது மக்களுக்கும், வியாபார சங்கத்தில் சங்கத்தினருக்கும் வீடு, வீடாகச் சென்று விளக்கிக் கூறினர்.

Tags : Awareness camp ,
× RELATED சட்ட விழிப்புணர்வு முகாம்