×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே புதுப்பெண் தற்கொலை வழக்கில் அண்ணியுடன் கணவன் கைது கள்ளத்தொடர்பை கண்டித்ததால் டார்ச்சர் செய்தது அம்பலம்

ஆர்.எஸ்.மங்கலம், நவ.9: ஆர்.எஸ்.மங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மனைவி கவுசல்யா. இருவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த செப்.30ம் தேதி கவுசல்யா கைகளை அறுத்துக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போதே கவுசல்யாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். கவுசல்யாவின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ஆர்டிஓ சுகபுத்ரா  வும் விசாரணை நடத்தினார்.

போலீசார் விசாரணையில், கவுசல்யாவின் கணவர் பாக்யராஜின் அண்ணன் குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பாக்யராஜூக்கும் அவரது அண்ணன் மனைவி ஜோதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதையறிந்த கவுசல்யா கணவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனவே கவுசல்யாவிடம் கூடுதலாக நகை, பணம் வாங்கி வா என்று பாக்யராஜ் டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார். இதனால் மனமுடைந்த கவுசல்யா கைகளை கத்தியால் அறுத்துக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாக்யராஜ் மற்றும் அவரது அண்ணன் மனைவி ஜோதியை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இருவரையும் திருவாடனை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பாலமுருகன், இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : brother-in-law ,arrest ,
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...