×

பங்கு தொகை வழங்கல்; காரைக்கால் பூமங்களம் கிராமத்தில் ஓட்டு வீடு தீயில் எரிந்து சேதம்

காரைக்கால், நவ.9: காரைக்கால் பூமங்களம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ஓட்டு வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது. காரைக்கால் திருநள்ளாறு பூமங்களம் கிராமத்தில் வசிப்பவர் தர். இவரது ஓட்டு வீட்டில் நேற்று முன் தினம் இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த சுரக்குடி தீயணைப்பு துறைனயினர் விரைந்து சென்று, தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில், தீ விபத்து, மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது, மேலும் தீ விபத்தில், ரூ.70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து திருநள்ளாறு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : house ,village ,Karaikal Poomangalam ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி