மேலூர், நவ.9: தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ள சங்கரலிங்கம், சங்கர நாராயண சுவாமி, கோமதியம்மாள் கோவிலில், கால பைரவர் சுவாமிக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது. மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.