×

நாளை திறப்பு: சினிமா தியேட்டர்கள் தயார்படுத்தும் பணி

மயிலாடுதுறை, நவ.9: கொரோனா தொற்று ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள் நாளை (10ம் தேதி) திறக்கப்படவுள்ளது. திரையரங்குகளை திறப்பதற்கு அரசு பல்வேறு விதி முறைகளை கடைப்பிடித்து திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வந்த 7 திரையரங்கத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை திரையரங்கில் அரசின் விதிமுறைப்படி பொதுமக்கள் சமுதாய விலகலை கடைபிடித்து படம் பார்ப்பதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திரையரங்கு மற்றும் அங்கு உள்ள கழிப்பறைகளை கிருமி நாசினி கொண்டு இருக்கைகள், மக்கள் கை வைக்கும் இடங்கள், சுத்தப்படுத்தப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரைப்படம் பார்ப்பதற்கு வரும் பொதுமக்களுக்கு கிருமி நாசினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என்றும் படம் பார்க்க வருபவர்கள் கட்டாயம் அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று திரையரங்க நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : cinema theaters ,
× RELATED சினிமா தியேட்டர்கள் அடுத்த மாதம்...