×

நீலகிரியில் 39 பேருக்கு கொரோனா


ஊட்டி, நவ. 9:  நீலகிரி மாவட்டத்தில் நேற்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 6,900 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று 39 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,939 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6605 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 40 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 294 பேர் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,Nilgiris ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...