×

பாளை அருகே பயங்கரம்: பச்சிளங்குழந்தை கிணற்றில் வீசி கொலை; கள்ளத்தொடர்பில் பிறந்ததால் தாய், கொன்றது அம்பலம்

கே.டிசி நகர், நவ. 9: பாளையங்கோட்டை அருகே கள்ளத்தொடர்பு காரணமாக பிறந்த 2 நாட்களே ஆன குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை அருகேயுள்ள ஒரு கிராமத்தின் கிணற்றில் பிறந்த சில நாட்களே ஆன தொப்புள் கொடியுடன் குழந்தையின் உடல் மிதந்தது. நேற்று அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து சிவந்திப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் கிணற்றில் மிதந்த பச்சிளம் பெண்குழந்தையின் உடலை மீட்டனர்.

சிவந்திபட்டி போலீசார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவந்திப்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு விசாரணை நடத்தினார். இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குடும்ப தகராறில் கடந்த 5 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்கிறார். அவருக்கு  கடந்த 6ம்தேதி அழகான பெண் குழந்தை பிறந்ததுள்ளது. கணவரை பிரிந்து வாழும் நிலையில் தனக்கு குழந்தை பிறந்தது தெரிந்தால் உறவினர்கள் மத்தியில் அவமானம் ஏற்படுவது மட்டுமல்லாமல் தனது கள்ளத்தொடர்பு வெளிப்பட்டு விடும் என நினைத்த அந்த பெண் நேற்று காலை அப்பகுதியிலுள்ள கிணற்றில் தொப்புள் கொடியுடன் குழந்தையை வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை தாயே கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் பாளை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pali ,Infant ,well ,
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...