×

டாஸ்மாக்கடையில் தகராறு; டிரைவரை கொல்ல முயற்சி: வாலிபருக்கு வலை

ஆவடி: டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் டிராக்டர் டிரைவரை வெட்டி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் தேடுகின்றனர். அம்பத்தூர், சோழபுரம், 2வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (33). இவர், குடிநீர் சப்ளை செய்யும் டிராக்டர் டிரைவர். நேற்று முன்தினம் இரவு விஜயகுமார் திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்கச் சென்றார். இவர், கடைக்கு உள்ளே நுழையும்போது எதிரே மது வாங்கி வந்த வாலிபர் ஒருவர் மோதிவிட்டார். இதனையடுத்து, அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த விஜயகுமார், வாலிபரை அடித்துள்ளார்.

இதன் பிறகு, அந்த வாலிபர், வீட்டுக்கு சென்று கத்தியுடன் டாஸ்மாக் கடைக்கு வந்தார். பின்னர், அங்கிருந்த விஜயகுமாரிடம் வாலிபர் மீண்டும் தகராறு செய்து, கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த, வாலிபர், தலைமறைவானார். பின்னர், அக்கம் பக்கத்தினர் விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags : store ,Tasmac ,teenagers ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை