×

ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பரிதாப பலி

திருவொற்றியூர், நவ.9: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகே பாஜ சார்பில் வேல் யாத்திரை நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் கொளத்தூர் அண்ணாதெருவை சேர்ந்த தனுஷ்(18) என்பவர் பங்கேற்றுவிட்டு மாலை நண்பர்களுடன் திருவொற்றியூர் தாங்கல் கடலில் குளிக்க சென்றார். அப்போது, ராட்சத அலையில் சிக்கி மாயமானார். மீனவர்கள் அவரை தேடியபோது இறந்த நிலையில் சிறிது நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...