×

தூத்துக்குடியில் குண்டாசில் இருவர் கைது

தூத்துக்குடி, நவ. 6:  தூத்துக்குடி  தெற்கு காட்டன் ரோடு பகுதியில் காம்பவுண்டு வீட்டுமுன் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கடந்த அக். 12ம் தேதி அந்தோனியார் கோவில்  தெருவைச் சேர்ந்த நசரேன் மெண்டிஸ் மகன் மரிய அந்தோனி தினேஷ் மெண்டிஸ் என்ற  தினேஷ் (45) என்பவர் குடிபோதையில் தீயிட்டு கொளுத்தினார். இதில்  காம்பவுண்டில் வசித்து வந்த நடராஜன் மகன் அண்ணாமலை என்ற சதீஷ் (42)  என்பவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த தென்பாகம் போலீசார் தினேஷை கைது செய்தனர். இதே போல் தூத்துக்குடியைச்  சேர்ந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கோவில்பிள்ளைவிளையைச் சேர்ந்த அண்ணாத்துரை மகன் ராஜாராமன் (27) என்பரை தூத்துக்குடி  அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் அந்தோனி தினேஷ் மெண்டிஸ், ராஜாராமன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரைத்தார். அதன்பேரில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, பிறப்பித்த உத்தரவை அடுத்து இருவரையும்  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன்  மற்றும் அதிகாரிகள் கைதுசெய்ததோடு இதற்கான ஆணையை  பாளை மத்திய சிறையில் வழங்கினர். அதன்படி இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...