×

விருத்தாசலம் சிறையில் கைதி திடீர் சாவு நீதிபதி முன்னிலையில் விசாரணை

விருத்தாசலம் கிளை சிறையில் கைதிக்கு வலிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் செல்வமுருகன் (39). இவர் கடந்த மாதம் 30ம் தேதி திருட்டு வழக்கு சம்பந்தமாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரால் கைது செய்யப்பட்டு, விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவருக்கு வலிப்பு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைக்காவலர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வமுருகன் உயிரிழந்தார்.

அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக சவ கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த 2ம் தேதி அன்று வலிப்பு நோய் வந்துள்ளது. உடன் அவரை சிறைக்காவலர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சிறைச்சாலைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஏற்பட்ட வலிப்பு நோயினால் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதுடன், இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிபதி ஆனந்த் முன்னிலையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு திருமணமாகி பிரேமா என்ற மனைவியும், 16 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சிறையில் கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : death ,prisoner ,jail ,Vriddhachalam ,judge ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!