×

மார்த்தாண்டத்தில் மகனுடன் பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு

மார்த்தாண்டம், நவ.6:மார்த்தாண்டம்  அருகே உள்ள காப்புக்காடு காட்டுவிளையை சேர்ந்தவர் குழந்தைவேல் மனைவி  ரெஞ்சிதம் (60). இவர் நேற்றுமுன்தினம் தனது மகன் சிந்துகுமார் (33) என்பவருடன்  பைக்கில் சென்றார். பைக் குழித்துறை அரசு மருத்துமனை அருகில் செல்லும்போது  ரெஞ்சிதம் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.  இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில்  இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்  சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ரெஞ்சிதம் இறந்தார்.  இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.

Tags : Marthandam ,
× RELATED மார்த்தாண்டத்தில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு