×

விருதுநகர் கம்மாபட்டியில் குழாய்கள் பழுதடைந்து ஒரு ஆண்டாச்சு உபயோக தண்ணீர் இல்லாமல் அவதி

விருதுநகர், நவ. 6: விருதுநகர் நகராட்சி 7வது வார்டுக்கு உட்பட்ட கம்மாபட்டி தெருவில் 500க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு 2 அடி பம்புகள், ஒரு சின்டெக்ஸ் டேங்க், ஒரு போர்ஸ்டோக் குழாய் என 4 குழாய்கள் உள்ளன. போர்ஸ்டோக் குழாய், 2 அடி பம்புகளும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பே பழுதடைந்த நிலையில், சின்டெக்ஸ் டேங்க் குழாயை நம்பியே இப்பகுதி மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் 3 மாதத்திற்கு முன் சின்டெக்ஸ் டேங்க் குழாயும் பழுதடைந்து விட்டது.

தற்போது நகராட்சி சார்பில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரும் நிலையில் பிற உபயோகத்திற்கான தண்ணீருக்கு கம்மாபட்டி மக்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள், நகராட்சியில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவிக்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் அடிபம்பு, போர்ஸ்டோக் பம்ப், சின்டெக்ஸ் டேங்க் பம்புகளை சரிசெய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கம்மாபட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Virudhunagar Kammapatti ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...