×

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், நவ. 6: விருதுநகர் பழைய பஸ்நிலையம் அருகே அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாநில செயலாளர் விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயி சங்க (சிபிஐ) மாவட்ட செயலாளர் சவுந்திரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,Virudhunagar ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...