×

தேனி-மதுரை சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளங்கள் சீரமைக்க கோரிக்கை

ஆண்டிபட்டி, நவ. 6: ஆண்டிபட்டி அருகே, தேனி-மதுரை சாலையில் க.விலக்கு பகுதியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே, தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் க.விலக்கு பகுதி உள்ளது. இப்பகுதியில் இருந்து தேனி, மதுரை, வைகை அணை மற்றும் வருசநாடு பகுதிகளுக்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன. இந்த சாலைகளில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு கூட்டுறவு நூற்பாலை, தனியர் மில்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையிலும், க.விலக்கில் இருந்து வைகை அணைக்கு செல்லும் சாலை பிரிவிலும் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலைப் பள்ளங்களை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Theni ,Madurai ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை