×

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் திமுக குறித்து அவதூறு எஸ்பியிடம் புகார்

ராமநாதபுரம், நவ. 6: ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ மீதும், இனக்கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பியிடம்  மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவும், திமுக மாநில தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளருமான தியாகராஜன் பதிவிட்டதாக பொய்யான தகவலை தயாரித்து டாக்டர் தியாகராஜன் என்கிற டிவிட்டர் பக்கத்தில் போலியான புகைப்படத்தை உருவாக்கி தனிநபர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் எம்எல்ஏ பெயரில் முத்துராமலிங்கதேவர் குறித்து தவறான தகவல்களை வடிவமைத்து இந்து சமய நெறியாளர் என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தென்மாவட்டங்களில் இனக்கலவரத்தை தூண்டும் வகையிலும் குந்தக எண்ணத்துடனும்  செயல்படுகின்றனர். எனவே, வலைதளங்களில் திமுகவிற்கு எதிராகவும், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக வும் அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : SP ,Ramanathapuram district ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்