×

வேளாண் மசோதாக்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பரமக்குடி, நவ. 6: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து பரமக்குடியில்  விவசாயிகள் போராட்டக்குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் மூன்று வேளாண் மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பாஜக அரசை கண்டித்தும், அதற்கு ஆதரவளித்த அதிமுக அரசை கண்டித்தும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், பரமக்குடி காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இப்போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் மயில்வாகனன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ஜீவானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேந்தை சிவா, மதிமுக செல்வகுமார், பெண்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்