×

மனநல மறு ஆய்வுக்குழு கூட்டம்

மதுரை, நவ. 6: தமிழக அரசின் மதுரை, விருதுநகர் மாவட்டத்திற்கான மனநல மறுஆய்வு குழு கூட்டம் மதுரையில் நடந்தது. குழுவின் தலைவரான ஓய்வு நீதிபதி சரவணப்பெருமாள் தலைமையில் நடந்த கூட்டத்தில், மனநல மருத்துவர் ராமானுஜம், குழு உறுப்பினர் வக்கீல் ஜான்ராஜதுரை ஆகியோர் பங்கேற்றனர். இதுகுறித்து சரவணப்பெருமாள் கூறுகையில், ‘மனநலன், மனநலம் பாதித்தோருக்கான பிரச்னைகள் தொடர்பான புகார்கள் விசாரிக்கப்படும். மருத்துவ கல்லூரி 2ம் தளத்தில் இயங்கும் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ பிரச்னைகள் தொடர்பான புகார்களை அளிக்கலாம். இதன்மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Psychiatric Review Committee Meeting ,
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...