×

வாலிபர் கொலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை நத்தம் அருகே பரபரப்பு

நத்தம், நவ. 6: நத்தம் அருகே, வாலிபர் கொலை வழக்கில் போலீசார் தேடுவதை அறிந்த கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ஸ்ரீகாந்த் (18), சென்னையில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர், நேற்று முன்தினம் இரவு ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கழுத்து அறுத்த நிலையில் பிணமாக கிடந்தார். நத்தம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து வாலிபரின் நண்பர்கள், உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்து கொலையாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (எ) ராமச்சந்திரன் (33), கூலித்தொழிலாளி நேற்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணையில், ‘ஸ்ரீகாந்துக்கும், ராமச்சந்திரனுக்கும் கொடுக்கல், வாங்கல் இருந்ததாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொலையாளியை போலீசார் தேடுவதை அறிந்த ராமச்சந்திரன், போலீசாருக்கு பயந்து மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த இரண்டு சம்பவங்களால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தற்கொலை குறித்தும் நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : police investigation ,murder ,mercenary ,Natham ,
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை