×

வையம்பட்டி ஒன்றிய பகுதியில் தேர்வான திமுக கிளை செயலர்கள், நிர்வாகிகளை அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்திப்பு கொடிகள், பதிவேடுகளை வழங்கினார்

மணப்பாறை, நவ.6: வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள 18 ஊராட்சிகளில் கிளைக்கழக தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட 263 கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்தந்த ஊராட்சிகளுக்கு நேரில் சென்று சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் சபியுல்லா, ஒன்றிய சேர்மன் குணசீலன், முன்னாள் சேர்மன் ராஜலெட்சுமி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன், இளைஞரணி பெர்னட் சாமிநாதன் உள்பட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இதில் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து அமயபுரம், நல்லாம்பிள்ளை, அனியாபூர், வெள்ளாளபட்டி, இனாம்புதூர், தவளைவீரம்பட்டி, வீ.பெரியபட்டி கே.புதுக்கோட்டை, கருங்குளம், வையம்பட்டி, நடுப்பட்டி மற்றும் கல்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு நேரில் சென்ற மகேஷ் பொய்யாமொழி கிளைக்கழக நிர்வாகிகளை சந்தித்து கிளை பதிவேடுகள் மற்றும் கட்சி கொடிகளை வழங்கினார். முன்னதாக நடுப்பட்டியில் ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் திமுகவின் புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

Tags : DMK ,executives ,branch secretaries ,Vaiyampatti Union Territory ,Anbil Mahesh ,
× RELATED திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்