மணப்பாறை, நவ.6: மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி அருகே கல்பாளையத்தான்பட்டியை சேர்ந்தவர் அருளப்பன், விவசாயி. இவரது மனைவி ஜெயமேரி(40). இவர்களது வீட்டில், 6 வெள்ளாடுகள் வளர்க்கின்றனர். இந்த ஆடுகளை, தினமும் ெஜயமேரி மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று மதியம் ஜெயமேரி தனது ஆடுகளை பொய்கைமலை அடிவாரப் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டார். அவை மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, திடீரென ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது. இதில், பொய்கைமலை அடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த 5 ஆடுகள் அருகேயுள்ள வனப்பகுதியை இடி தாக்கியது.
அப்போது அங்கு மேய்ந்துகொண்டிருந்ததில், 5 ஆடுகள் இடி தாக்கிய அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே இறந்தன. ஒரு ஆடு மட்டும் உயிர் பிழைத்தது. இது குறித்து கிராம மக்கள், வருவாய்த்துறையினர், மணப்பாறை போலீசார், கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில், ஆடுகளை வளர்த்து வந்த ஜெயமேரி குடும்பத்துக்கு வேறு தொழில் இல்லை. அவர்களிடம் இருந்த 6 ஆடுகளில் 5 ஆடுகள் இறந்து போக, ஒரு ஆடு மட்டும் உயிருடன் உள்ளது. இதனால், ஜெயமேரி குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.