திருவாரூர், நவ.6: திருவாரூர் அடியக்கமங்கலத்தில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. திருவாரூரை தலைமையிடமாக கொண்டு பழைய நாகை சாலை, தெற்கு வீதி, விளமல், சேந்தமங்கலம் மற்றும் நன்னிலம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் கிருஷ்ணா ஸ்வீட் மற்றும் பேக்கரியின் புதிய கிளை திறப்பு விழா திருவாரூர் -நாகை தேசிய நெடுஞ்சாலை அடியக்கமங்கலத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் புதிய கிளையை தஞ்சை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் பாண்டுரங்கன் திறந்து வைத்தார். முதல் விற்பனையை கவிதா பாலமுருகன் துவங்கி வைக்க, அடியக்கமங்கலம் குத்புதீன் பெற்றுக்கொண்டார். திறப்பு விழா நிகழ்ச்சியில் அடியக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஜமாத்தார்கள் மற்றும் தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கடை உரிமையாளர் பாலமுருகன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.