×

காலி பணியிடங்களை நிரப்ப கோரி மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, நவ.6: காலி பணியிடங்களை நிரப்ப கோரி தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பில் இணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் கலைவாணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் பாலசுப்பிரமணிபாரதி, துணை தலைவர் ராஜம் எலிசபெத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார். மக்கள் நல்வாழ்வு துறையில் காலியாக உள்ள 750க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags : Demonstration ,Pharmacists' Association ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்