×

பாஜ வேல் யாத்திரைக்கு அரசு தடை வருத்தம் அளிக்கிறது

கரூர், நவ. 6: கரூர் மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. கரூரில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவுக்கு பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் சிவசாமி, பிரச்சார பிரிவு மாநில செயலாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: வேல் யாத்திரை சம்பந்தமாக ஆரம்பத்தில் இருந்தே ஆயத்த பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிகழ்ச்சிக்காக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடமும் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடத்த இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் நிகழ்வு நடைபெறும் பகுதிக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு இதுபோல கூறியிருப்பது வருத்தமளிக்கிறது என்றார்.

Tags : government ,pilgrimage ,Bajaj Vail ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...