அவிநாசி,நவ.6: அவிநாசி அருகே உள்ள தெக்கலூர் துணை மின் நிலையம் மற்றும் ஏரிப்பாளையம் துணை மின் நிலையங்களில் மின்சார சாதனங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (7ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே தெக்கலூர், சூரிபாளையம், திம்மியாம்பாளையம், புதுப்பாளையம், ஏரிப்பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், காமநாயக்கன்பாளையம், சி,டி,சி.நகர், புதுநல்லூர், ஆலம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சேனாங்காடு, முருகம்பாளையம், சாமந்தங்கோட்டை, கோதபாளையம், வெங்கிகல்பாளையம், நல்லிக்கவுண்டன்பாளையம், வேட்டுவபாளையம், சேவூர் ஒரு பகுதி, சாவக்கட்டுப்பாளையம், தண்டுக்காரன்பாளையம், கே.வடுகபாளையம், சென்னியாண்டவன்கோவில், வினோபாநகர், எலச்சிபாளையம் ஒருபகுதி, விராலிக்காடு, கிட்டம்பாளயம், ராயர்பாளையம், செங்காளிபாளையம், கொளத்துப்பாளையம், தண்ணீர்பந்தல், வலையபாளையம், தண்ணீர்பந்தல், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபடுகிறது.