×

ராஜபாளையத்தில் மார்க்கெட் வாசலில் கடைகளால் இடையூறு

ராஜபாளையம், நவ.5: ராஜபாளையம் மார்க்கெட் வாசலில் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் உள்ளதை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே செயல்பட்டு வரும் மார்க்கெட் அதிகாலையிலிருந்தே காய்கறிகள், பழங்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா தடை காலங்களில் மார்க்கெட் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது காய்கறி கடைகள் பழக்கடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் மார்க்கெட் வாசலில் அதிகளவு சில்லரை கடைகள் வைத்து விற்பனை செய்து வருவதால், பொதுமக்களும் வாகனங்கள் வாசலில் செல்வதற்கு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. இதனை மார்க்கெட் நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத நிலையில், இருந்து வருவதாக வியாபாரிகளும் பொதுமக்களும் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சந்தைகளில் இடையூறாக இருக்க கூடிய நடைபாதை கடைகளை உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வந்து வருகின்றனர்.

Tags : shops ,market entrance ,Rajapalayam ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி