×

ஆவின் பணிக்கு சமூக இடைவெளியின்றி நுழைவுச் சீட்டு பெற குவிந்த தேர்வர்கள்

மதுரை, நவ.5: மதுரை ஆவினில் காலியாக உள்ள எழுத்தர், டிரைவர், அலுவலக உதவியாளர் இயந்திர பணியாளர் என 62 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு 4,500க்கு மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நேற்று முதல் வரும் 6ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. நுழைவுச்சீட்டு பெற நேற்று ஓரே நாளில் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் சமூக இடைவெளி இன்றி ஆவின் அலுவலகத்தில் குவிந்தனர். வெளியே நின்று கொண்டிருந்த தேர்வர்கள் ஓரு அறையில் அமர வைக்கப்பட்டு அடையாள அட்டை சரி பார்க்கப்பட்டு நுழைவுச் சீட்டு விநியோகம் செய்யப்பட்டது. தேர்வர்கள் சிலர் கூறுகையில், ‘‘விண்ணப்பத்துடன் முகவரி கொடுத்துள்ளோம். மேலும் நுழைவுச்சீட்டுக்கான படிவும் ஏற்கனவே போட்டோ ஒட்டி இணைத்துள்ளோம். அதனை ஏற்றுக்கொண்டு, அவற்றை தபால் மூலம் வீட்டிற்கு அனுப்பியிருக்கலாம். அதைவிடுத்து, அனைவரையும் இங்கு வரவழைத்து, கூட்டம் கூட்டுகின்றனர். கொரோனா காலத்தில் தொற்று பரவ வாய்ப்பு உண்டு. இதனை ஆவின் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை’’ என தெரிவித்தனர்.

Tags : Crowds ,
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...