×

மணல் கொட்டுவதில் தகராறு பெண்ணின் மண்டை உடைப்பு


கொடைக்கானல், நவ.5: கொடைக்கானலில் மணல் கொட்டி வைப்பது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் பெண்ணுக்கு மண்டை உடைக்கப்பட்டது. கொடைக்கானல் பெருமாள்மலை அடுத்த வடகவுஞ்சி பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கோவிந்தராஜ்(49). இவர் இந்த பகுதியில் வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுவதற்கு தேவையான எம்.சாண்ட் மணலை பஞ்சாயத்து ரோட்டில் கொட்டி வைத்து உள்ளார். இவர்கள் மணல் கொட்டி வைத்த இடம் தங்களது இடம் என்று அருகில் உள்ள கருப்பன் மகன் தங்கராஜ்(49), இவரது மனைவி முருகம்மாள்(44) ஆகிய இருவரும் தகராறு செய்து உள்ளனர்.

கொட்டி வைத்த மணலை உடனே அகற்றக்கோரி இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தங்கராஜ், அவரது மனைவி முருகம்மாள் இருவரும் சேர்ந்து கோவிந்தராஜ் மற்றும் இவரது மனைவி மாரியம்மாளை உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் மாரியம்மாள் தலையில் பலத்த காயமடைந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுபற்றி கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு