×

தமிழில் புதிய நாட்டிய, நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய ரூ.75 ஆயிரம் நிதியுதவி கலைஞர்கள், கலை நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி, நவ.5: திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் தமிழில் சிறந்த புதிய நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பமுள்ள கலைஞர்கள் மற்றும் கலை நிறுவனங்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழக அரசின் சார்பில் தமிழில் சிறந்த நாட்டிய நாடகங்களை உருவாக்கி மேடையேற்றம் செய்யும் நிறுவனங்களுக்கு நல்கை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2019-2020ம் ஆண்டுக்கான தமிழில் புதிய நாட்டிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றம் செய்ய கலை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கலைஞர்கள், கலைக்குழுக்கள், கலை நிறுவனங்கள் விண்ணப்பப்படிவம் பெறவும் நிபந்தனைகள் பற்றித் தெரிந்து கொள்ளவும் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை. சென்னை-600 028. என்ற முகவரியிலும், 044-24937471 என்ற எண்ணிலும், tneinm@gmail.com < mailto:tneinm@gmail.com >, tneinm@tn.gov.in < mailto:tneinm@tn.gov.in > என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிந்துகொள்ளலாம். வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேர வேண்டும். இத்தகவலை திருச்சி கலக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : art institutes ,artists ,
× RELATED புத்தகம் படித்து கதை சொல்லும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டும்